"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Sunday, 16 September 2012

முஹமது நபியை மோசமாக சித்தரித்து படம் எடுத்த அயோக்கியர்களை கண்டித்து நெல்லையில் மாபெரும் போராட்டம்!


               

               

 15-09-12 அன்று மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில்ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து அமெரிக்க அரசிற்கு எதிரான தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.கட்டுக்கடங்காத கூட்டாத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில மேலாண்மை குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி படம் எடுத்தவர்களையும் அதற்கு துணை நிற்கும் அமேரிக்க அரசையும் கண்டித்து  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


Saturday, 15 September 2012

நோட்டீஸ் விநியோகம்

நபி(ஸல்) அவர்களை அவமதித்து திரைப்படம் எடுத்த  அமெரிக்க அரசையும், பாதிரியாரையும் கண்டித்து 15-09-12 அன்று நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் குறித்த நோட்டீஸ் 14-09-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

ஃபித்ரா விநியோகம் -2012

கே.டி.சி.நகர் கிளையில் 2012 ரமலானில் ரூ. 9750 மதிப்பிலான
ஃபித்ரா பொருட்கள் 36 ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..