"நம்பிக்கைகொண்டு, தமதுநம்பிக்கையுடன் அநீதியைக்கலந்துவிடாமல் இருப்போருக்கே அச்சமற்றநிலை உள்ளது. அவர்களே நேர்வழிபெற்றோர்!" (அல்குர்ஆன்6:82)

Sunday, 18 November 2012

 கே.டி.சி.நகர் கிளையில் 18-11-12 ஞாயிற்றுக்கிழமை அன்று ( மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களும் ) என்ற தலைப்புகளில் பெண்கள்
 பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.                              

Sunday, 16 September 2012

முஹமது நபியை மோசமாக சித்தரித்து படம் எடுத்த அயோக்கியர்களை கண்டித்து நெல்லையில் மாபெரும் போராட்டம்!


               

               

 15-09-12 அன்று மாலை 4 மணி அளவில் மேலப்பாளையம் சந்தை முக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில்ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து அமெரிக்க அரசிற்கு எதிரான தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.கட்டுக்கடங்காத கூட்டாத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாநில மேலாண்மை குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி படம் எடுத்தவர்களையும் அதற்கு துணை நிற்கும் அமேரிக்க அரசையும் கண்டித்து  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!


Saturday, 15 September 2012

நோட்டீஸ் விநியோகம்

நபி(ஸல்) அவர்களை அவமதித்து திரைப்படம் எடுத்த  அமெரிக்க அரசையும், பாதிரியாரையும் கண்டித்து 15-09-12 அன்று நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் குறித்த நோட்டீஸ் 14-09-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் கிளையில் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

ஃபித்ரா விநியோகம் -2012

கே.டி.சி.நகர் கிளையில் 2012 ரமலானில் ரூ. 9750 மதிப்பிலான
ஃபித்ரா பொருட்கள் 36 ஏழை குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..


Thursday, 24 May 2012

சாதிவாரி கணக்கெடுப்பு நோட்டீஸ்..

கடந்த 13-05-2012 அன்று கே.டி.சி.நகர் கிளையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்த தான உதவி

நெல்லை கே.டி.சி.நகர் கிளையில் கடந்த 13-5-2012 அன்று ஒரு யூனிட் அவசர இரத்த தான உதவி கொள்கைச் சகோதரர்களால் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 15 February 2012

நெல்லையில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்

பிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் நெல்லை சந்திப்பு இரயில் நிலையம் அருகில் நடைபெற்றது. மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!





பிப்ரவரி 14 போராட்டம் குறித்து விளம்பரம்


 கே.டி.சி.நகர் கிளையில் பிப்ரவரி 14 போராட்டம் குறித்து பேனர் வைக்கப்பட்டது. சுவரொட்டிகள் கிளை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒட்டப்பட்டது, நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்  

Tuesday, 7 February 2012

பயான் சி.டி. & புத்தகங்கள் விநியோகம்

கே.டி.சி.நகர் கிளையில் 05-02-12 அன்று பயான் சி.டி.க்கள் மற்றும் நூல்கள், குர்ஆன் ஆகியவை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்

பிப்ரவரி 14 சுவர் விளம்பரம்


கே.டி.சி.நகர் கிளையில் 29-01-12 அன்று பிப்ரவரி 14 போராட்டத்திற்கு சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. போராட்டம் குறித்த செய்தி மக்களிடையே சென்றடைவதற்கு இந்த விளம்பரம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்